திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்மாமண்டபம் அடுத்த கீதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேஷன் ஆகிய இருவரும் ஆடுகள் வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்த சிலர், தெருவில் மேய்ந்துகொண்டிருந்த 3 ஆடுகளை கடத்திச் சென்றனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆடு திருட்டில் ஈடுபட்ட மொய்தீன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.