சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, 471 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற நிபந்தனையின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்.
டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செந்தில்பாலாஜி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.