கேரள ATM-களில் தொடர் கொள்ளை: தீரன் பட பாணியில் தப்பிக்க முயற்சி : வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?
Jan 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேரள ATM-களில் தொடர் கொள்ளை: தீரன் பட பாணியில் தப்பிக்க முயற்சி : வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல்…நாமக்கல் அருகே சிக்கியது. என்ன நடந்தது?? விரிவாக பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் மின்னல் வேகத்தில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்தது அந்த கண்டெய்னர் லாரி. ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட அந்த கண்டெய்னர், சாலையில் சென்ற மற்ற வாகனங்ளை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதனை கண்ட பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடுவது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக லாரியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். லாரி செல்லும் வழிகளில் தடுப்புகளை அமைத்து அவர்கள் காத்திருந்தனர். ஆனால், தடுப்புகளை எல்லாம் மதிக்காமல் அந்த கண்டெய்னர் லாரி கடந்து சென்றது. மேலும், போலீசார் மீது மோதவும் முயன்றுள்ளது.

லாரியை பின்தொடர்ந்து சென்ற போலீசார், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது, கண்டெய்னர் லாரியில் உள்ளவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளதும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்ய முயன்றபோது, போலீசார் மீது கத்தியை கொண்டு அந்த வடமாநில நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தற்காப்புக்காக தமிழக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு
காலில் படுகாயம் ஏற்பட்டது.

மறுபுறம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு to சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள் யார்? தடுப்புகளை மீறி அவர்கள தப்பிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

கண்டெய்னர் லாரியில் வந்த வடமாநில நபர்கள் அனைவரும், கேரளாவில் கடந்த 3 மாதங்களாக ஏடிஎம் கொள்யைில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடைசியாக திருச்சூரில் உள்ள ஏடிஎம்மில் கைவரிசை காட்டிவிட்டு, காரில் தப்பிச்செல்ல முயன்றபோது, அவர்களை கேரள தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த கொள்ளை கும்பல், ஊருக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரிக்குள் காரை செலுத்தி மறைத்துள்ளது. கொள்ளையர்களும் அந்த லாரியில் பதுங்கிக்கொண்டனர். லாரிக்குள் இருந்த காருக்குள் மொத்தம் 6 பேர் இருந்தனர். லாரியை ஒருவர் ஓட்ட, மற்றொருவர் கிளீனர் போல் நடித்துள்ளனர்.

அந்த கண்டெய்னர் லாரிதான், விஜயமங்கலத்தில் அதிவேகமாக பயணித்து சிக்கிக்கொண்டது. கண்டெய்னர் லாரியின் கதவை உடைத்து திறந்த போலீசார், உள்ளே இருந்த காரை பறிமுதல் செய்து, அதில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.

போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஹரியானாவை சேர்ந்த ஹசர் அலி என்பவருக்கு, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இரண்டு கால்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த சேலம் சரக டிஐஜி உமா, நடத்தப்பட்ட கண்கவுண்டரில் திட்டமிடல் எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார். கைது செய்யப்பட்ட வடஇந்திய கொள்ளையர்களிடம் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான், கைததான கொள்ளையர்கள் எங்கெங்கெல்லாம் கைவரிசை காட்டிள்ளார்கள் என்பது முழுமையாக தெரிய வரும்.

Tags: namakkalTrichuratm theft gangKumarapalayamcontainer lorry
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

Next Post

நடப்பாண்டில் 100 வெற்றிகரமான Startups நிறுவனங்களை உருவாக்குவோம் – சென்னை ஐஐடி இயக்குநர் நம்பிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies