இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாப்பம்மாள் என தமிழக பாஜக மாநிலம் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “வேளாண் துறையில் முன்னோடியாக விளங்கிய, மதிப்புக்குரிய பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பம்மாள் அவர்கள் ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தமது 109 வயது வரை தொடர்ந்து விவசாயப் பணிகள் மேற்கொண்ட பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு, பத்மஶ்ரீ விருது அளித்துப் பெருமைப்படுத்தியதோடு, நமது பாரதப் பிரதமர் மோடி
அவர்கள் நேரில் சந்தித்து ஆசியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாப்பம்மாள் பாட்டி அவர்களின் வாழ்க்கை, இளைய தலைமுறையினருக்கு பெரும் எடுத்துக்காட்டாகும். அவரது புகழ் தொடர்ந்து நிலைத்திருக்கும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.