திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது எனவும் பூலோக வைகுண்டம் எனவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் இங்கு புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனையொட்டி வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக ரெங்கநாதர் கோயிலில் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில், முதியவர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வரிசையில் நின்ற பக்தர்களுக்கு குடிநீரும், பிரசாதமும் வழங்கப்பட்டன.