புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா், தான்தோன்றிமலையிலுள்ள கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோயில்களிலும் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அதேபோல் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.