இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை தொழில் வளர்ச்சியில் ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் வேகாஸ் பெஸ்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமரின் விரிவான பார்வையை பயன்படுத்தி இளைஞர்கள் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர மத்திய அரசு பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறிய அவர், இளைஞர்கள் அந்த திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.