மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் பகுதியில் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள முல்தாசில்தார் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், பல்வேறு பகுதிகளில் கூண்டுவைத்தும் புலி சிக்காமல் போக்குக்காட்டியது.
இந்நிலையில், ஜனாலா பகுதியில் நடமாடிய புலியை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும், பிடிப்பட்ட புலியை நாக்பூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.