பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் கட்டிட தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், வெளிமாகாணங்களை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அம்மாகாணத்தின் பஞ்ச்கூர் நகர் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் தப்பினார்.