நீலகிரி மாவட்டம் மசினகுடி சாலையில் இரவு நேரத்தில் 12 அடி நீள மலைப் பாம்பு ஊர்ந்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலைப் பாதையில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.