ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாபாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த வாரம் 4 ஆயிரம் கன அடியாக காணப்பட்ட நீர்வரத்து, தற்போது 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.