கோவையில் 9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அன்னூரில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சௌந்தர்யா, மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக புகார் எழுந்தது. மேலும், 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதன்பேரில், சௌந்தர்யாவை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.