மயிலாடுதுறையில் பனை விதை நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மாநில முழுவதும் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பனை விதை நடும் பணி குத்தாலம் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக சேவகர்கள் கலந்துகொண்டு பனைவிதைகளை நட்டனர்.