சென்னையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திரு.வி.க. நகர் அகரம் சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 2 முதியவர்கள் கீழே விழுந்தனர். இந்நிலையில், முதியவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
இதைபார்த்த போக்குவரத்து உதவி ஆய்வாளர், ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், காவல் ஆய்வாளரை தகாத வார்தையில் பேசி கீழே தள்ளிவிட்டார். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.