கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டோபிகானல் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சலவைத் தொழில் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியிலிருந்து வரும் ஆற்றுநீரில் இவர்கள் துணிகளை துவைப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆற்றில் கலப்பதாக புகார் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், ஆற்றில் கொட்டப்படும் கண்ணாடி குப்பைகளால் காலில் காயங்கள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.