தென்காசியில் இளைஞர்களை குறிவைத்து பணம் மற்றும் பொருட்களை பறித்த 9 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிரைண்டர் என்ற செயலி மூலம் இளைஞர்களை அழைத்து மர்மகும்பல் பணப்பறிப்பில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், பணப்பறிப்பில் ஈடுபட்ட 9 இளைஞர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து அரிவாள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.