சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெசவுத் தொழிலாளி ஒருவர் தனது இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி ஆனந்தன், தனது வீட்டு பணிகளை முடிக்க சிலரிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் வயிற்றில் கட்டி ஏற்பட்டு அவர் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பணம் வழங்கியவர்கள் ஆனந்தனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தன், தனது இரு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவரை தடுத்து மீட்டனர்.