RSS அணிவகுப்பு - அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Jul 24, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

RSS அணிவகுப்பு – அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமூகத்திற்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு கூட கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி எந்த நிகழ்வும் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம் உள்ளது என்றும், திமுகவின் பவள விழாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு ஏன் அனுமதி வழங்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பதற்றமான பகுதிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. காவல்துறையின் வாதத்தை கேட்ட நீதிபதி, அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நகைச்சுவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி ஆர்.ஆர்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலிக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: RSS Parade - What's the Hesitation in Allowing? : Madras High Court questions the police
ShareTweetSendShare
Previous Post

வழக்கு விசாரணையில் பொறுப்பற்ற பதில்! – தலைமை நீதிபதி கண்டனம்!

Next Post

தனது இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற நெசவுத் தொழிலாளி!

Related News

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies