புதுச்சேரியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.