கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை ஆந்திர அரசு அமைத்துள்ளது.
அந்தக் குழுவினர் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள தேவஸ்தான கிடங்கு, ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.