பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கி சோதனை நடைபெற்றது.
பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து, புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவற்றை இயக்கி வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை நடைபெற்றது. அதில், முதல்கட்டமாக, செங்குத்து பாலம், சுமார் இரண்டடி உயரம் தூக்கப்பட்டு பின்னர் சிறிது சிறிதாக முழுவதும் தூக்கி சோதனை செய்யப்பட்டது.
பின்னர், சோதனை வெற்றி அடைந்ததை ரயில்வே ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனையடுத்து, பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.