விடுதலைக்கு உழைத்த வீரப் பெண் பார்வதி ஆச்சி ஆற்றிய பணிகள் சிறப்பு வாய்ந்தது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் காந்தி உலக மையம் தன்னார்வலர்கள் வழங்கும் பார்வதி ஆச்சி நினைவாக, மகளிருக்கான “மா” விருது விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு, பொம்மன் பெள்ளி தம்பதி உள்ளிட்டோருக்கு “மா” விருதை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், விடுதலைக்கு உழைத்த வீரப் பெண் பார்வதி ஆச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது நினைவாக விருது பெற்றவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டது பெருமையாக உள்ளது என்று ஜிகே வாசன் தெரிவித்தார்.