மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது பாதையை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததால் மீண்டும் வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.