சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி இரண்டாவது நாளாக அதற்கான ஒத்திகை நடைபெற்றது.
இந்திய விமானப் படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி வரும் 6-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன.
இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக ஒத்திகை நடைபெற்றது. அப்போது விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர்.