இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளதாக ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்க ஜி 7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.