பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் தண்ணீரில் சிக்கி கொண்டது.
மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், முசாபூர் மாவட்டம் நயா காவுன் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெள்ளத்தில் மூழ்கிய ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேரை உள்ளூர் மக்களின் உதவியுடன் பேரிடர் மீட்டுக்குழுவினர் மீட்டனர்.