விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு உடுத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வைஷ்ணவி தேவியாக அருள் பாலித்தார். இதனைதொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
உள்ளூர், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படன. 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.