கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.
மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த லோகநாதன் காலமானதையடுத்து, அவரது வீட்டில் இறுதி அஞ்சலி நடைபெற்றது.
அப்போது, ஃப்ரீசர் பாக்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த லோகநாதனின் மனைவி சாந்தி உள்பட 12 பேர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
இதில் அனைவரும் காயமடைந்த நிலையில், அவர்களை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.