ஹிமாசல பிரதேசத்தில் கழிவறைக்கு வரி விதிப்பதற்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசின் மகத்தான திட்டங்களால் திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து ஹிமாசல பிரதேசம் நூறு சதவீதம் விடுபட்டு விட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
கழிவறைக்கு வரிக்கும் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசின் திட்டத்தைக் கண்டித்த ஜெ.பி. நட்டா, அம்மாநில அரசு நிதானம் இழந்துவிட்டதாக விமர்சித்தார். அத்துடன் பொதுமக்களை துன்புறுத்துவதையே இலக்காக கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினார்.