டெல்லியில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தலைநகர் டெல்லியின் சதர்பூரில் உள்ள ஸ்ரீ ஆதி காத்யாயனி ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.