நவீன மருத்துவம் கிராமப்புறங்களை நோக்கி செல்ல வேண்டும் - முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்!
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நவீன மருத்துவம் கிராமப்புறங்களை நோக்கி செல்ல வேண்டும் – முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது : மருத்துவ துறை நாட்டில் மிக முக்கிய துறையாக பார்க்கப்படுகன்றது. மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். மருத்துவத் துறையில் ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில் நுட்பம் மருத்துவ துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. நவீன மருத்துவ தொழில் நுட்பம் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும் எனவும் மருத்துவம் பார்க்க வரும் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதற்கான கட்டணத்தில் மருத்துவ துறை செயல்பட வேண்டும் என்பது இன்றியமையாததாக பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்தியாவில் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் 27 சதவிகிதம் இதய நோயாக இருக்கிறது. இதை தவிர்க்க அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம் மாற்றம், மன அழுத்தம் போன்றவையும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது என அவர் கூறினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை நடைமுறைகளை பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மேற்கத்திய கலாச்சார நடைமுறையை பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கை பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இன்றைய சூழலில் செல்போன் நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. செல்போனை முறையாக பயன்படுத்த வில்லை என்றால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு குழந்தைகள் அடிமையாக்கும் போது அவர்களின் வாழ்க்கை பாழ்படுகிறது. செல்போன் பழக்கத்திற்கு அடிமையாக்கும் இளைஞர்கள் அவர்களது கற்பனை மற்றும் சுயமாக சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். செல்போனை தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளின் மன நிலை மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் இஸ்ரேல் ஈரான் போரால் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் தெற்காசிய நாடுகளில் உருவாகியுள்ளது. தேவையற்ற பதற்றம் பொருளாதாரத்தை பாழ் படுத்தும். இந்த நிதியாண்டில் நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் 6 கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நவீன மருத்துவம் கிராமப்புற பகுதிகளை நோக்கியும் செல்ல வேண்டும். இந்தயா தற்போது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில்
தொழில் நிறுவனங்களை இயக்குபவர்களாக இந்தியர்கள் தற்போது இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுகிறார்கள். இந்த போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. அரசியல் வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணத்துடன் விளங்க வேண்டும் என  வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

Tags: coimbatoreFormer Vice President Venkaiah NaiduMedical sectorRobotic technology surgery
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக சுமார் ஒரு டன் தங்கம் உள்ளதாக தகவல்!

Next Post

திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies