சென்னை மாதவரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்ககை பணியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நமது தமிழக பாரதிய ஜனதா சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் உறுப்பினர் சேர்க்கை பணிகளின் ஒரு அங்கமாக நேற்று மாலை, சென்னை மாதவரம் பகுதியில், உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டோம்.
அப்பகுதியைச் சேர்ந்த நமது கட்சி நிர்வாகிகளோடு இணைந்து, 25-வது வார்டு, பூத் எண் 53-ல் உள்ள பொதுமக்கள், நமது கட்சியில் உறுப்பினராக இணைவதன் அவசியங்களை நாம் விளக்கியதன் அடிப்படையில் உறுப்பினராக இணைந்து கொண்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.