தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கம் மற்றும் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு இயந்திரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்துக்களை மட்டும் கைது செய்து மிரட்டும் பாசிச போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.