விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில், MI 17 ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சிகளை மேற்கொண்டன.
வானில் வட்டமடித்தபடி வலம் வந்த எம்ஐ 17 ஹெலிகாப்டரில் இருந்து குதித்த வீரர்கள், பணய கைதிகளை மீட்கும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டரில் இருந்து குதித்த வீரர்கள் 2 குழுக்களாக பிரிந்து பணய கைதிகளை மீட்கும் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது, பார்வையாளர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது.