ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதன்படி ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராமநாத சுவாமி கோயிலுக்குள் அதிக அளவு மழைநீர் புகுந்தது.
இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். கோயிலுக்குள் தேங்கிய மழைநீரை மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.