திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில், ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார் .
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில், ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
உடன்,திருப்புக்கொள்ளியூர் வாகீசர் மடாலயத்தின் தவத்திரு காமாட்சிதாச சுவாமிகள், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் கோட்ட தலைவர், .ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம், இறைவன் அருள் பெற்று சுபிக்ஷமாக இயங்கிட வேண்டி ஶ்ரீகுமரன் குழுமத்திற்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.