தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவாச்சாலை பகுதியில், நாராயணன் என்பவர் சொந்தமாக நீச்சல் குளம் கட்டி அதனை வணிக ரீதியான பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்.
காலாண்டு விடுமுறையையொட்டி பள்ளி மாணவ – மாணவியருக்கு நீச்சல் பயிற்சியும் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீச்சல் குளத்திற்கு தனது குடும்பத்தினருடன் வருகைதந்த ஹன்சிகா என்ற சிறுமி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பு நீச்சல் குளத்தில் சிறுமி ஆனந்தமாக விளையாடி மகிழும் வீடியோ வைரலாகி வருகிறது.