டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு வருகைதந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
இந்தியாவில் முதல் இருதரப்பு பயணம் மேற்கொள்ள, தனது மனைவி சஜிதா முகமதுவுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லி வந்தடைந்தார். இதனையடுத்து ராஷ்டிர பவனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவர்களை வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அதிபர் முகமது முய்சுவை அறிமுகப்படுத்தினர்.
இதனையடுத்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அதிபர் முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோர் மரியாதை செலுத்தினர்.