சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைவெளியை அதிகரிக்கும் நோக்கில் கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்காவை அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.
பூங்காவை விட நீர்நிலைகள் தான் சென்னைக்கு அவசியம் என கருத்து தெரிவித்த பசுமை தீர்ப்பாயம், அது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் ஏற்கனவே 30 கோடி லிட்டர் மழை நீர் தேக்கி வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்ட 3 குளங்கள் இருக்கும் நிலையில், மேலும் 10 கோடி லிட்டர் மழை நீரை தேக்கி வைக்கும் அளவிற்கான 4 புதிய குளங்கள் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.