பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை காரணமாக ஹரியானாவில் பாஜக வெற்றி சாத்தியமானதாக அம்மாநில முதலமைச்சர் நாயப் சிங் சைனி புகழாரம் சூட்டினார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. இதையொட்டி, குருஷேத்திராவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் நாயப் சிங் சைனி, பாஜகவுக்கு வாக்களித்த 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடியின் தலைமையால்தான் இந்த வெற்றி சாத்தியமானதாக கூறிய அவர், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் தன்னை ஆசிர்வதிப்பாக குறிப்பிட்டார்.