ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சொந்த ஊர்களுக்கு செல்ல 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆயுத பூஜை, விஜயதசமி வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 715 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மற்றும் நாளை இயங்கும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.