கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புகழ்பெற்ற இக்கோயிலை சுற்றி ஏராளமான கடைகள் இருந்து வந்தன. கடைகள் இருக்கும் இடம் கோயில் நிலம் என்பதால் அதனை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முயன்ற போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் போலீசாரின் பாதுகாப்புடன் 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.