நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக 10 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியரான கார்த்திகேயன், பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
நெல்லை மாவட்டம் முழுவதும் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ள ஆட்சியர், பொதுமக்களின் மனு மீது அலட்சியமாக செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் மீதான தவறு உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இந்நிலையில், நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.