கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் டிஜிபியுமான ஸ்ரீலேகா, தனது கணவருடன் பாஜகவில் இணைந்தார்.
அவரை மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், ஸ்ரீலேகா பாஜகவில் இணைந்ததன் மூலம் கட்சி மேலும் வலுபெறும் என்று தெரிவித்தார்.