ஒடிசா மாநிலம் மஹிசாபட் அருகேயுள்ள தேன்கனல் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடம், திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கிய இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.