எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 166 விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.