சிவகங்கை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேளாங்குளத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வக்குமார் கடந்த ஜூலை 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைதான 5 பேரில் மருதுபாண்டி, வசந்தகுமார் ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.