திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது மனைவி வெங்கட்டம்மாள் உடன் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதால் சீனிவாசன் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து சீனிவாசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.