சேலத்தில் கனமழை காரணமாக ஆனைவாரி முட்டல் அருவி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முட்டல் அருவிக்கு நீர்வரத்து வழக்கத்தை விட அதிகரித்தது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டல் அருவி மூடப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் தடை விதிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.