திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த அனல் மின்நிலையத்தின் அலகு 1-ல் இருந்து நாள் ஒன்றுக்கு 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாம் நிலை அலகுகளிலிருந்து 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் பெறப்பட்டு வந்த நிலையில் கொதிகலன் பழுது காராணமாகவும், அதனை பராமரிக்கப்படும் காரணமாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இது விரைவில் சரி செய்யப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.